வேலூர் தொரப்பாடி காமராஜர் நகர் 5-வது கிராஸ் தெருவின் கடைசியில் மின்விளக்கு அமைத்துத் தர வேண்டும், என வார்டு கவுன்சிலரிடம் பலமுறை எடுத்துக்கூறியும் பயன் இல்லை. தெருவில் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனாலும், தெரு விளக்கு இல்லாததாலும் குழந்தைகள் தெருவில் விளையாட அச்சப்படுகின்றனர். எங்கள் தெருவில் மின் விளக்கு அமைத்துத் தர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.
-ஏ.சரவணன், தொரப்பாடி.