ஆபத்தான மின்கம்பங்கள்

Update: 2026-02-01 13:33 GMT

பெரம்பலூர் மாவட்டம் ஒகலூரில் இருந்து வேப்பூர் செல்லும் சாலையோரத்தில் உள்ள வயல்வெளிப் பகுதிகளில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. வயல்வெளியில் விவசாய பணிகள் நடைபெறும்போது இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரியத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் ஆய்வு செய்து சேதம் அடைந்துள்ள மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்