சங்கராபுரம் அருகே கொசப்பாடி கிராமத்தில் உள்ள சில மின்கம்பங்கள் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த மின்கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளதால், பொதுமக்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு அங்கு புதிய மின்கம்பங்களை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.