தெரு மின்விளக்கு வசதி தேவை

Update: 2022-10-16 10:47 GMT

வேலூர் சித்தேரி தென்றல் நகர் ராஜீவ்காந்தி தெருவில் தெரு மின்விளக்கு வசதிகள் இல்லை. அந்த வழியாக தினமும் ஏராளமான மக்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக பள்ளி குழந்தைகள் காலை, மாலை சென்று வருகின்றனர். அந்தத் தெருவில் உள்ள விநாயகர் கோவிலுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். தெருவில் உள்ள காலி மனைகளில் புதர்கள் வளர்ந்துள்ளது. அதில் இருந்து விஷ பூச்சிகள் சாலையில் ஊர்ந்து வருகின்றன. தெரு மின்விளக்குகள் இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். எங்கள் பகுதியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு மின் விளக்கு வசதியை செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

-கார்த்திக், சித்தேரி.  

மேலும் செய்திகள்