மின்கம்பத்தை அகற்ற வேண்டும்

Update: 2023-10-08 17:21 GMT

அரக்கோணம் தாலுகா அலுவலக பஸ் நிறுத்த நிழற்குடை முன் சமீபத்தில் பிரதான சாலை ஓரமாக மின் கம்பங்கள் அமைத்தனர். இதில் அகற்றப்பட்ட பழைய மின் கம்பம் அப்புறப்படுத்தாமல் அங்கேயே விட்டு சென்றதால் பஸ் ஏறுவதற்காக வரும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தவறி விழும் அவலம் நடக்கிறது. அங்குள்ள தாலுகா அலுவலகம், தாலுகா போலீஸ் நிலையம், உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகிய அலுவலக வளாக பகுதிகளில் இரவில் இருள் சூழ்ந்துள்ளது. எனவே, அங்குள்ள மின் கம்பத்தை அப்புறப்படுத்தி, மின் விளக்குகள் அமைக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்தோஷ்குமார், சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும் செய்திகள்