மேம்பாலத்தில் மின் விளக்குகள் எரியவில்லை

Update: 2023-05-10 13:28 GMT

திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் ரெயில்வே மேம்பாலம் திறக்கப்பட்ட ஒரே ஆண்டில் மேம்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் பல எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவில் மேம்பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். விபத்துகளும் நடக்க வாய்ப்புள்ளது. மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகளை எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மகேஷ், தியாகி அணணாமலைநகர். 

மேலும் செய்திகள்