மத்தூர் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு உள்ள உயர்கோபுர மின்விளக்கு மாதக்கணக்கில் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் பயணிகள் அச்சத்துடன் பஸ்சுக்காக காத்து இருக்கின்றனர். இந்த உயர்மின் கோபுர மின் விளக்குகள் எரியாததால் பயணிகளும், பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சமூக விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே பயணிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உயர்கோபுர மின்விளக்குகளை எரிய செய்ய வேண்டும்.