புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள குப்பையன்பட்டி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட வீரடி விநாயகர் ஆலயத்தில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த 6 மாதங்களாக எரியாமல் பழுதடைந்து கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் போதிய வெளிச்சம் இல்லாததால் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பழுதடைந்துள்ள உயர்கோபுர மின்விளக்கை உடனே சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.