பழனி மதினாநகர் சேரன்தெருவில் உள்ள மின்பெட்டி பழுதடைந்து கதவுகள் உடைந்து திறந்து கிடக்கிறது. மேலும் மின்கம்பிகள் வெளியே தொங்கியபடி உள்ளது. இதனால் குழந்தைகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.