தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி வெள்ளிச்சந்தை சாலையில் கடந்த சில வாரங்களாக மின் கம்பத்தில் இருந்து ஒயர் அருந்து கீழே தொங்கியபடி உள்ளது. இந்த பகுதியில் அதிக அளவு பள்ளி, கல்லூரி மற்றும் அரசு, தனியார் பஸ்கள் என 100-க்கு மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் வாகனங்கள் மீது மின்சாரம் பாயும் அபாயம் உள்ளது. எனவே மின்வாரிய துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து அறுந்து தொங்கும் ஒயரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.