புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் இருந்து வண்ணாரப்பட்டி செல்லும் சாலையில் மின்மாற்றி அருகே மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எலும்புக்கூடாய் காட்சியளிக்கிறது. பொதுமக்கள், கால்நடைகள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் பெரியளவில் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் நட சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.