குறைந்த மின்னழுத்தம் சரி செய்யப்படுமா?

Update: 2026-04-26 17:48 GMT

திருச்சி உறையூர் கல்லறை மேட்டு தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக குறைந்த மின்னழுத்தம் மூலம் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குறைந்த மின்னழுத்தத்தால் மின் சாதன பொருட்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரியத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்