புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா விச்சூர் கிராமத்தில் மின்கம்பங்கள் நடப்பட்டு அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு சில பகுதிகளில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் வாகனங்கள் செல்லும்போது மின்கம்பி உரசி பெரிய அளவிலான விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.