திறந்தநிலையில் மின்பெட்டி

Update: 2026-01-04 10:10 GMT

சென்னை பல்லாவரம் கண்டோன்மென்ட் பூங்காவில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள்வரை தினமும் நடைபயிற்சி மேற்கொள்கிறார்கள். இங்குள்ள மின்சார பெட்டி ஒன்று திறந்தநிலையில் ஆபத்தாக உள்ளது. மேலும் பூங்காவின் படிகட்டுகள் அமைந்துள்ள இடத்தில் உள்ள மின் விளக்குகளும் சரிவர எரியவில்லை. இந்தநிலையை தவறான வழியில் இளம் தலைமுறையினர் பயன்படுத்துகிறார்கள். எனவே பூங்காவை நிர்வகிக்கும் அதிகாரிகள் மின்சார பெட்டியை சரிசெய்யவும், மின்விளக்குகள் எரிய செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்