ராமநாதபுரம் மாவட்டம் தலைத்தோப்பு பகுதியில் உள்ள மின்விளக்குகள் சில வாரங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் சாலை இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகனஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே மேற்கண்ட பகுதியில் மின்விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.