அரியலூர் மாவட்டம், ராயம்புரம் இந்திரா நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள தெருவிளக்கு சில வாரங்களாக எரியாத காரணத்தால், அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெளியில் நடமாட மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் பாம்புகள் தொல்லை அதிகளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்கை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.