ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2025-12-21 12:26 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட குழிக்கடவு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. ஆனால் அந்த பகுதியில் தெருவிளக்குகள் பழுதாகி ஒளிராமல் கிடக்கின்றன. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே தெருவிளக்குகளை பழுது நீக்கி மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்