சிவகங்கை மாவட்டம் கல்லல் யூனியன் வெளியாத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக சில மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்விளக்குகளை சரிசெய்து தர நடடிவடிக்கை எடுப்பார்களா?