ஸ்ரீவில்லிபுத்தூரில் ராமகிருஷ்ணாபுரம், போலீஸ் நிலைய சாலை, சிவகாசி சாலை , வன்னியம்பட்டி விலக்கு ஆகிய பகுதிகளில் உள்ள உயர் கோபுர மின்விளக்குகள் கடந்த சில நாட்களாகவே பழுதடைந்த நிலையில் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதிகளில் பழுதடைந்து கிடக்கும் விளக்குகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.