மதுரை மாவட்டம் பனங்காடி ரோட்டில் அமைந்துள்ள அய்யனார் கோவில் அருகில் தெருவிளக்கு வசதி போதிய அளவில் இல்லை. இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகின்றது. இதனால் அவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து கூடுதல் மின் விளக்குகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.