வேலூர் அண்ணா சாலை அருகில் பழைய அரசு பெண்ட்லேண்ட் மருத்துவமனை சாலையையும், பில்டர் பெட் சாலையையும் இணைக்கும் தெரு உள்ளது. இந்தத் தெரு, அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருசக்கர வாகனங்களிலும், நடந்து செல்லும் பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இங்குள்ள மின்கம்பங்களில் விளக்குகள் இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவில் இந்தப் பாதையை பெண்கள் கடக்க அச்சப்படுகின்றனர். அங்குள்ள மின்கம்பங்களில் மின்விளக்குகளை அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வெற்றிவேல், வேலூர்.