கடலூர் துறைமுகம் அடுத்த பச்சையாங்குப்பத்தில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால் இரவில் அப்பகுதியில் வாகன விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும் வழிப்பறி உள்ளிட்ட குற்றசம்பவங்கள் நடைபெறும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.