கடமலைக்குண்டு பழைய ஆஸ்டல் தெருவில் உள்ள மின்கம்பங்களின் இணைக்கப்பட்டுள்ள மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மீது மின் கம்பிகள் உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தாழ்வாக செல்லும் மின்சார கம்பிகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.