நெல்லையை அடுத்த பேட்டை- பழைய பேட்டை இணைப்பு சாலை ஆதம்நகர் ரேஷன்கடை அருகில் கடந்த சில நாட்களாக தெருவிளக்கு எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே தெருவிளக்கு மீண்டும் ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.