‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2025-09-28 10:30 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தெற்கு பரணம் மாரியம்மன் கோவில் தெருவில் சாலையோரம் மின்கம்பம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின்கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்கு கடந்த சில மாதங்களாக எரியாமல் இருந்தது. இதனால் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதனால், இரவு நேரங்களில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது என ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எரியாமல் இருந்த மின்விளக்கை ஒளிர்விட செய்தனர். எனவே இதுகுறித்து செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்