வாணாபுரம் அருகே கானாங்காடு பகுதியில் உள்ள மின்விளக்குகள் இரவில் மட்டுமின்றி பகலிலும் எரிந்துகொண்டிருக்கின்றன. இதனால் மின்விளக்குகள் விரைவாக சேதமடைவது மட்டுமின்றி, வீணாக மின் விரயமும் ஏற்படுகிறது. எனவே மின்வாரியத்துறை அதிகாரிகள் பகலில் எரியும் மின் விளக்குகளை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.