ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2025-08-03 18:14 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தேவகிரி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் பெரும்பாலான தெருவிளக்குகள் பழுதாகி கிடக்கின்றன. இதனால் அவை இரவில் ஒளிருவது இல்லை. இதன் காரணமாக அந்த பகுதி பொதுமக்கள் அவசர தேவைக்கு கூட வெளியே வர அச்சப்படுகின்றனர். அத்துடன் வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகரித்து உள்ளதால், அவர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே அங்கு பழுதாகி கிடக்கும் தெருவிளக்குகளை சரி செய்து மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்