விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2025-07-20 15:11 GMT

விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் உள்ள தூண்கள் மிகவும் சேதமடைந்து அபாய நிலையில் உள்ளது. இதனால் இதனை கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய டிரான்பார்மர் அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்