அரியலூர் மாவட்டம் கோப்பிலியன் குடிக்காடு கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் போதுமான அளவில் மின்விளக்கு வசதி செய்து தரப்படவில்லை. இதனால் இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் அதிகளவில் அவதியடைந்து வருகின்றனர். இருள் சூழ்ந்து காணப்படும் சாலைகளில் செல்வதற்கு பெண்களும், குழந்தைகளும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு போதுமான அளவில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.