மதுரை மாவட்டம் லெ.சோலைபட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தெரு விளக்குகள் ஒளிராமல் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியே பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள மின் விளக்கை ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?