அரியலூர்-கல்லங்குறிச்சி சாலையில் அரசு சிமெண்டு ஆலை நிறுவனத்தை அடுத்துள்ள பகுதிகளில் போதிய அளவில் மின்விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதிகளில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த வழியாக எதிரே வரும் வாகனங்களை அடையாளம் காணமுடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் அதிகளவில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் கனரக வாகனங்கள் அதிகளவில் வந்து செல்லும் இந்த பாதையில் போதிய அளவு மின்விளக்கு அமைக்கப்படாமல் இருப்பதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு போதிய அளவில் மின்விளக்குகள் அமைத்தி வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.