தியாகதுருகம் அருகே தியாகை கிராமத்தில் குறைந்த மின்னழுத்தம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் வீடுகளில் உள்ள மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதாகி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சீரான மின்வினியோகம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.