ராமாபுரம் ஊராட்சி குறிஞ்சி நகரில் அடிக்கடி குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி வீடுகளில் உள்ள டி.வி., மின்விசிறி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதாகி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் புதிய மின்மாற்றி அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.