ஏரியூர் அருகே கூர்க்காம்பட்டியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்கு ஒதுக்குப்புறமாக சுடுகாடு உள்ளது. அங்கு இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்லும் போது தாழ்வாக செல்லும் மின் கம்பியால் இடையூறு ஏற்படுகிறது. இதன் காரணமாக இறந்தவர்களின் உடல்களை பொதுமக்கள் சுமந்து செல்லவும், வாகனங்களில் எடுத்து செல்லவும் முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே ஆபத்தான தாழ்வாக செல்லும் மின் கம்பியால் அசம்பாவிதம் நேரும் முன் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரபு, ஏரியூர்.