எரியாத தெரு விளக்குகள்

Update: 2025-06-29 14:26 GMT

கரூர் மாவட்டம், புன்செய் தோட்டக்குறிச்சி, பேரூராட்சி அலுவலகம் அய்யம் பாளையத்தில் அமைத்துள்ளது. இங்கு இருந்து சாலை வளைவு பாதை முதல் தோட்டக்குறிச்சி வரை 2 கிலோ மீட்டர் தூரம் வரை சாலையோர தெரு விளக்குககள் இருந்தும் எரிய வில்லை. கடந்த 3 மாதமாக இந்த நிலை நீடித்து வருகிறது. இதனால் இப்பகுதியில் இரவு நேரத்தில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து எரியாமல் உள்ள தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்