அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் இரவு, பகலாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் இந்த சுகாதார நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின் விளக்கில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் எரியாததால் இப்பகுதியில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்விளக்குகளை அகற்றிவிட்டு புதிய மின் விளக்குகள் அமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.