பெரம்பலூர் வட்டம் அம்மாபாளையம் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் நோயாளிகள் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது. தற்போது பல மாதங்களாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின் கம்பம் பழுதடைந்து உள்ளது. இதனால் இரவில் வரும் நோயாளிகள் போதிய வெளிச்சம் இல்லாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.