பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே சோலாடி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். வனப்பகுதியையொட்டி உள்ள பகுதி என்பதால் வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது. ஆனால் அங்குள்ள தெருவிளக்குகள் ஒளிராமல் பழுதாகி கிடக்கிறது. இதனால் இரவில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு பழுதான தெருவிளக்குகளை சரி செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.