மேல்மலையனூர் அடுத்த வளத்தி கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி அடிக்கடி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள், வணிகர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சீரான மின்வினியோகம் செய்ய மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.