ராசிபுரம், ஆண்டகளூளர் கேட் அருகே குருக்கபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து தனியார் பள்ளிகள் செல்லும் பாதைகளின் இருபுறமும் கருவேல மரங்கள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்துள்ளது. இதனால் அந்த வழியாக மாணவர்கள் செல்ல கடும் சிரமப்படுகிறார்கள். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிப்படுகின்றனர். எனவே இந்த சாலையோரம் உள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நித்திஷ்ராஜா, குருக்கபுரம்.