திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு சாலையில் உள்ள திருப்பாலைவனம் பஜார் வீதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள மின்விளக்குகள் சரிவர எரியவில்லை. மேலும், இந்த பகுதியில் இரவு நேரங்களில் மாடுகள் அதிகமாக நடமாடுவதால் அந்த வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். வாகனங்களில் செல்பவர்களும் விபத்து ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சத்தில் செல்லும் நிலை உள்ளது. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மின்வாரிய துறை அதிகாரிகள் உடனடியாக மின்விளக்கை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.