நெல்லை மேலப்பாளையம்- ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள தாய்நகர் 2-வது தெருவில் மின்கம்பத்தை சூழ்ந்து சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மேலும் அந்த மின்கம்பத்தில் உள்ள தெருவிளக்கு கடந்த சில மாதங்களாக எரியவில்லை. இதனால் அந்த வழியாக இரவில் பொதுமக்கள் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே மின்கம்பத்தை சூழ்ந்த சீமை கருவேல மரங்களை அகற்றுவதுடன் தெருவிளக்கு மீண்டும் ஒளிர அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.