அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் அம்பாபூர் கிராமத்தில் உள்ள அப்துல்கலாம் முதல் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இங்கு தெரு விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.