எரியாத உயர்கோபுரன மின்விளக்கு

Update: 2025-06-22 11:37 GMT

கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் கிராமம் நொய்யல் குறுக்குச் சாலையில் பரமத்தி ரோடு சந்திப்பில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த உயர் கோபுர மின் விளக்கில் அமைக்கப்பட்டுள்ள 4 மின் விளக்குகளில் 2 மின் விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் போதிய வெளிச்சம் இன்றி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் விபத்து நடக்கும் அபாயம் உள்ளதுடன், இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்