அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை பொதுமக்கள் கடந்து செல்லும் வகையில் சாலையில் குகைவழிப்பாதையுடன் கூடிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் அடிப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்களின் நலன் கருதி மின் விளக்கு அமைக்கப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்ல முதியவர்கள், பெண்கள் பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் வழிபறி உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.