ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-06-15 13:37 GMT

 கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், வேலாயுதம்பாளையம், டி.என்.பி.எல். சாலையோரத்தில் இந்த மின் கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது அதன் அடிப்பகுதி உடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின் கம்பம் முறிந்து சாலையில் விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆபத்தான மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்