சிதம்பரம் அருகே தண்டேஸ்வரநல்லூர் தாயம்மாள் நகரில் கடந்த ஒரு மாதமாக குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு வருகிறது. இதனால் வீடுகளில் உள்ள மின்விசிறி, டி.வி. உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதடைந்து வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.