வேம்பத்தி வெள்ளாளபாளையத்தில் ஏரி அருகே உள்ள மின்கம்பத்தின் மேல் பகுதி சிமெண்டு காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பலத்த காற்று அடித்தால் கீழே சாய்ந்து விடும் வாய்ப்புள்ளது. இதனால் பேராபத்து ஏற்படலாம். அதற்கு முன்பு மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?