சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள், முதியோர்கள் சரியான தூக்கமின்றி அவதியடைகின்றனர். மேலும் மின்தடையால் வீட்டில் உள்ள அத்தியாவசிய வேலைகள் பாதிக்கப்படுவதாக இல்லத்தரசிகள் தெரிவித்தனர். எனவே இப்பகுதியில் நிலவும் தொடர் மின்தடையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?