தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2025-06-08 07:34 GMT

பந்தலூர் அருகே பாதிரிமூலாவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. ஆனால் போதிய தெருவிளக்கு வசதி இல்லை. ஏற்கனவே உள்ள தெருவிளக்குகளும் பழுதாகி கிடக்கின்றன. இதனால் அங்கு இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அத்துடன் வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவசர தேவைக்கு கூட வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு போதிய தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும் செய்திகள்